Pages

Friday, April 20, 2012

இஸ்ரேல் வீரன் ஒருவனின் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்ட ரஷா ஹெவ்சியே என்ற நான்கு வயது பாலஸ்தீன குழந்தையை பற்றி பெண்கவிஞர் ஹனால் மிகைல் அஷ்ரவி எழுதிய கவிதை..அந்த குழந்தையின் வலியை அப்படியே பிரதிபலிக்கிறது..

" நாளை கட்டை அவிழ்ப்பார்கள்
எனக்கு யோசனையை இருக்கிறது
எஞ்சியிருக்கும் என் ஒற்றை கண்ணால்
அப்பிள் பழத்தின்
ஒரு பாதியைத்தான்
பார்க்க முடியுமா?

துப்பாக்கி குண்டை நான் பார்க்கவில்லை
என் தலைக்குள் வெடித்த
அதன் வலியை மட்டும் உணர்ந்தேன்.

பெரிய துப்பாக்கியுடன்
நடுங்கும் கைகளுடன்
கண்களில் ஒரு வெறித்த பார்வையுடன்
அந்த ராணுவ வீரன் என் மனதில்
அழியாதிருக்கிறான்...

நான் கேள்விப்பட்டேன்
ஒன்பது மாத குழந்தையொன்றும்
ஒற்றைக் கண்ணை இழந்ததாக

நானோ வளர்ந்தவள்
கிட்டத்தட்ட நாலு வயது
போதிய அளவு
நான் வாழ்க்கையைப் பார்த்துள்ளேன்
ஆனால் அவளோ சின்னக் குழந்தை .
எதுவும் அறியா சின்னக் குழந்தை..."

- நன்றி ஆனந்த விகடன்

No comments:

Post a Comment